ஹைக்கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைக்கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜனவரி, 2015

கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் – 32 ல் வெளியான ஐக்கூ கவிதைகள் .


கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ்  – 32  ல் வெளியான ஐக்கூ கவிதைகள் .

வான்கோ தோட்டத்து மலர்கள்
வர்ணமிழந்தன
தூரிகைக்கு தானம் கொடுத்து .

மழை அழித்தது
தெருவோர ஓவியத்தை
வரைந்தவனின் அன்றைய தினத்தையும் .

குடையைப் பழுது பார்ப்பவர்
விரிக்காத குடைகளுடன்
நனைகிறார் வெயிலில் .

பூச்சிகளின் ஆயுளை
நிர்ணயிக்கின்றது
பல்லி நாக்கின் நீளம் .

போட்டி போட்டன
கடை பொம்மைகள்
பேத்திக்கு பரிசாவதற்கு .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ்  32   ]


ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பொதிகைச் சாரல் ஜனவரி 2015 இதழில் இரண்டு ஹைக்கூக்கள்


பொதிகைச் சாரல் ஜனவரி 2015 இதழில் இரண்டு ஹைக்கூக்கள்

---------------------------------------------------------------

அன்னதானம்

அலைமோதும் கூட்டம்

பாட்டியின் மாக்கோலம் .

கடித்துவிட்டது
பணப்பையை
தொலைந்த செருப்பு .


[ பொதிகைச் சாரல் ஜனவரி 2015 ]

வியாழன், 1 ஜனவரி, 2015

தொட்டி மீன்கள் .


தொட்டி மீன்கள் .

சற்றே உப்புக்குறைவு

சலித்துக் கொண்டன

தொட்டி மீன்கள் 
.

கடல் வற்றிவிட்டது

கவலைப்பட்டன

கண்ணாடிக்குள் மீன்கள் .

கடலுக்குள் திரியும் மீன்கள்
கண்டதில்லை
கண்ணாடிக் கூண்டுகளை .



[ முகநூல் பதிவுகள் ]

செவ்வாய், 25 நவம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர் 16 - 30 , 2014 ] - இதழில் வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .



கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர் 16 - 30 , 2014 ] - இதழில் 

வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .

தேசீய ஒருமைப் பாட்டு தினம்

மொழி வேறுதான்
இனம் வேறுதான்
மனம் ஒன்றுதானே ?

இனத்தை மறந்து விடு
மொழியைத் துறந்து விடு
உணர்வால் ஒன்று படு .

உயிரற்ற சாலைகள் கூட
இணைந்தேயிருக்கின்றன
மனிதர்களுக்குப் பாடமாய் .

கலைவாணர் பிறந்த தினம் .

கலைவானில் பறந்தார்
கருணையால் உயர்ந்தார்
மனதில் நிற்கிறார் என்.எஸ்.கே .

மறைந்தார் கலைவாணர்
மறையாத சிந்தனைகளால்
நிலைத்து நிற்கிறார் .

மாட்சுவோ பாஷோ நினைவு தினம் .

மூவடி படிமங்கள்
வெளிச்சமாய் இன்றும்

பாஷோ ஏற்றிய தீபங்கள் .

புதன், 19 நவம்பர், 2014

கொஞ்சம் ஹைக்கூ ....

                         கொஞ்சம் ஹைக்கூ ....
வெட்டப் படுகின்றன குளங்கள்
நிரப்பப் படுகின்றன
சிலரின் பணப்பைகள் .

தீராப்பசி தீர்ந்து விட்டது
இதர செலவுக்கும் பணம்
நாளை தேர்தல் .

பாற்கடல் கடையப் பட்டது
பாத்திரம் மாறிப் போனது
விஷமாயிற்று அமிர்தம் .

விடிய விடிய மழை
பாப்பாவுக்கு கவலை
கப்பலுக்கு காகிதம் இல்லை .


கறுப்பு வெள்ளை
கட்டங்கள் அதேதான்
ஆட்டம்தான் வேறு .

நட்டது வாழை
பழுத்தது பலா
மண் மாறியதால் .

திங்கள், 17 நவம்பர், 2014

கொஞ்சம் ஹைக்கூ ....


கொஞ்சம் ஹைக்கூ ....

மழை இருந்தது
விளைநிலம் இருந்தது
வயிறு மட்டும் இருக்கின்றது .

பெரிதாகிறது வீடு
அதிகமாகிறது வெற்றிடம்
வீட்டிலும் மனதிலும் .


தெருவெங்கும் பிளாஸ்டிக்
சுற்றுச் சூழலுக்குக் கேடு
இன்றைய பசி தீர்ந்தது .

கீதை பைபிள் குரான்
எல்லாமே ஒன்றுதான்
பழைய பேப்பர் வியாபாரி .

தடங்கள் அதேதான்
கழிந்தன வருடங்கள்
பாதங்கள் மட்டும் வேறு .


கீதை பைபிள் குரான்
எல்லாமே ஒன்றுதான்
பழைய பேப்பர் வியாபாரி .


ஞாயிறு, 16 நவம்பர், 2014

உலக சைவ உணவாளர்கள் தினம் .கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்

உலக சைவ உணவாளர்கள் தினம் .


உண்பது உயிர் வாழ
உண்போம் சைவம்

இன்னொரு உயிரும் வாழ .

இருப்பது ஆறறிவு
பசிதீர மட்டும்
ஐந்தறிவா ?

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

வியாழன், 13 நவம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

வளர்ப்போம்
வியத்தகு நகரங்களை

கூடவே மானுடத்தையும் .

நகரங்கள் விரிகின்றன
சுருங்குகிறது
மனித மனம் .

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

செவ்வாய், 11 நவம்பர், 2014

இந்திய குழந்தைகள் தினம் . ஹைக்கூ .

இந்திய குழந்தைகள் தினம்

இலவசம்
உணவல்ல கல்வி

குழந்தையின் ஏக்கம் .


ஒவ்வொரு குச்சியிலும்
எரிகின்றது
ஒரு குழந்தையின் எதிர்காலம் .

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

வியாழன், 6 நவம்பர், 2014

பொதிகைச்சாரலில் எனது ஹைக்கூ - மனவனம் .

மன ( வனம் )

சிங்கம் புலியுண்டு
நரிகளுக்கு இடமில்லை
மனதில் வனம் .

[ பொதிகைச் சாரல் – நவம்பர் 2014 ]


சனி, 25 அக்டோபர், 2014

கவிச்சூரியனில் கவிதை மூன்று

காலனுக்கும் ஆசை
கவியரசரின்
கவிதை கேட்க .

உலகில் உள்ளோர்
அனைவருக்கும் உணவு
அதுவே நம் கனவு .

வாழ்க்கையிலும் தேவை
வார்த்தைகளிலும் தேவை

சிக்கனம் .



கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 26 [ அக்டோபர் 16 - 31 , 2014 ]

திங்கள், 29 செப்டம்பர், 2014



[ கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் செப்டம்பர் 16 – 30 / 2014  ]

சனி, 27 செப்டம்பர், 2014


அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலரில் வெளியான ஹைக்கூ கவிதைகள் . 





கல் எறியப்பட்டது
காய்ந்த குளத்தில்
இரையானது தவளை .

வானத்தில் மீன்கள்
குளத்தில் நட்சத்திரங்கள்
இடமாற்றம் மனதில் .

கழிந்து போன கணங்கள்
அத்தனையும்
காகிதங்களோடு தான் .

ஐந்தோடு முடிந்தது
கண்களில் நட்சத்திரம்
மூச்செங்கும் கந்தகம் .

ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
நின்றது அடிவாரத்தில் .


[ அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலர் ]

வியாழன், 18 செப்டம்பர், 2014


அருவி இதழ் 20 ஹைக்கூ சிறப்பிதழில் வெளியானவை .

நிறைய பொம்மைகள்
நிறைய தின்பண்டங்கள்
நிற்பது அம்மாவின் முத்தம்தான் .

எப்போதும் படபடப்பு
சன்னலருகில்
வண்ணத்துப்பூச்சி .

தொலைவில் இடி
பார்வையில் மின்னல்
காலடியில் ஈரம் .

காற்று இருக்கிறது
தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்தவர்கள் தானியத்தை .

வழியெங்கும் பூக்கள்
விதவையின்
இறுதி ஊர்வலம் .

நிலம் கரைந்து
பகை மறந்து விட்டது
வழக்கு முடியவில்லை .

[ அருவி இதழ் 20 ஜனவரி – மார்ச் 2014 ]