லிமரைக்கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லிமரைக்கூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 டிசம்பர், 2014

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 – டிசம்பர் 16 – 31 ] இதழில் எனது லிமரைக்கூ கவிதைகள்


இனிஒரு விதி செய்வோம்
விளை நிலத்தை விற்க மாட்டோம்
எப்பாடாயினும் பயிர் செய்வோம் .


மார்கழி மாதம் குளிர்காலம்
மனதில் நிறைந்த இசையாய் மணக்கிறது
வெம்பாவை ஆண்டாள் திருக்கோலம் .
  

மானிடரை உய்விக்க உதித்தார்
அன்பை மாநிலத்தில் வளர்க்க பாடுபட்டு
மிருகங்களால் சிலுவையில் மரித்தார் .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 – டிசம்பர் 16 – 31 ] 


வியாழன், 4 டிசம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29 [ டிசம்பர் 1 - 15 , 2014 ] இதழில் வெளிவந்த என் லிமரைக்கூ கவிதைகள் :


கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29 [ டிசம்பர் 1 - 15 , 2014 ] இதழில் 

வெளிவந்த என் லிமரைக்கூ கவிதைகள் :



எய்ட்ஸ் தினம்

இளமையை விரும்பும் யயாதி
இறந்தால் வராது உன் வாழ்க்கை
உணர்ந்தால் இல்லையே வியாதி .

கப்பற்படை தினம்

கடல் வழியே பாதுகாப்பு
கடல் சூழ்ந்த நம் நாட்டை
காக்கும் நல்ல கட்டுக்கோப்பு .

கார்த்திகை தீபம்

வெளிச்சமாய் தீபங்கள் வீடெங்கும்
வருடம் தோறும் வரும் கார்த்திகை
வளமாய் அமையட்டும் நாடெங்கும் .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29  டிசம்பர் 1 - 15 , 2014 ]