![]() |
குருவும் சீடனும் – பழம் .
[ உருவகக் கதை ]
|
சீடன் குருவிடம் சென்றான் .
குருவின் இருப்பிடமான வட்டப் பாறை காலியாக
இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
” மேலே பார் . நான் இங்கே இருக்கிறேன் “ குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
சீடன் மேலே பார்த்தான் .குரு மரத்தின் கிளை
ஒன்றில் அமர்ந்திருந்தார் . “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள் குருவே ? “
” பழங்களை
பறித்துக் கொண்டிருக்கிறேன் “ குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
” பழத்திற்காக
மரமேற வேண்டுமா ? கீழிருந்து
கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக்
கொள்ள வேண்டும் ? “
குரு புன்னகைத்தார் .
“ நன்றாக யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும்
ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி
பட்டு சிதைந்து போகலாம் . அப்படி கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் .
கற்கள் பட்டு மரத்தின் இலைகளும் கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப்
பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும்.
இதோ இந்த பழத்தை ருசித்துப் பார் . “ குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம்
வீசினார் .
சீடன் இரு கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன்
பழம் சேதமடையாத வகையில் பிடித்துக் கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில்
கொண்டு சென்றான் .
குருவின் புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
“ பார்த்தாயா , பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி
இருக்கிறது . ”
சீடன் திகைப்புடன் மேலே பார்த்தான் .
“ நாமாக எந்த முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால்
கிடைக்கும் பழத்தை ருசிப்பது . “
சீடன் கையில் இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து
விட்டு , மரமேறத்
தொடங்கினான் .
நல்லுபதேசம்
பதிலளிநீக்கு