அருவி இதழ் 21 , 22 ஏப்ரல் - செப்டம்பர் 2014 ல் வெளியான என் கவிதை .
எழுதப் படும்
எல்லா வரிகளும்
ஏற்கனவே
எழுதப்பட்டு விட்டதாகவே
இருக்கின்றன .
யாரால்...
எப்போது ... எங்கே ...
எதுவும் தெரியவில்லை
.
எனினும்
எழுதப்பட்டு
விட்டன என்றே
உணரத்
தோன்றுகிறது .
வாழ்க்கையும்
அப்படியேதான்
எத்தனை விதமாக
வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாராலோ
எப்போதோ
வாழப்பட்டு
விட்டதாகத்தான்
தோன்றுகிறது .
அதனால்தான்
வாழ்க்கையும்
கவிதையும்
அதனதன்
போக்கில்
இயங்கிக் கொண்டே
இருக்கின்றன .
[ நந்தலாலா இணைய
இதழ் – 017 வைகாசி – 2014 இதழிலும் வெளியாகி உள்ளது ]
நன்றி : அருவி மற்றும் நந்தலாலா .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக