சலனம் .
நிழலுக்கு ஒதுங்கிய
மரத்தின் இலையில் -
பார்வையில் பதிந்த
ஜன்னலின் கம்பியில் -
காலுக்கடியில்
நெருடிய புல்லில் -
நிறம் தெளிக்கும்
ஒற்றை மலரில் -
எங்கெங்கு காணினும்
வான்கோவின் தூரிகை வீச்சாக
அந்த
பட்டாம்பூச்சி
-
அசைவின்றி .
படபடப்பு
மனதில்
மட்டும் .
[ புதுப்புனல்
டிசம்பர் 2013 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக