கணையாழியில் வெளியான எனது இரண்டாவது கவிதை .
முற்றுப் பெறாத கவிதையும் முழுமையான முதல்
வரியும்
எழுதி
எழுதி
திருத்தப்பட்ட
கவிதையின்
சிதிலமான
வரிகள்
கண்
சிமிட்டும் குண்டு பல்பின்
மெலிந்த
வெளிச்சத்தில்
என்னைத்
தூங்காமல் அடிக்கின்றன .
எத்தனை
தடவை திருத்தி எழுதினும்
முடிக்கப்
படாமலேயே
காற்றில்
பரிதவிக்கின்றன .
சாளரங்கள்
மூடப்பட்ட பின்னும்
ஏனோ
முற்றுப் பெற மறுக்கின்றன .
வலிக்கும்
மனதோடு
முதல்
வரியில்
பார்வை
பதியும் போது
முழுமை
தெரிகின்றது
எனினும்
மற்ற
வரிகளை
முற்றிலுமாக
அழிக்க
மனம்
வராததால்
முழுமை
அடையாமல்
வெகு
நாளாய்
என்
முன்னே படபடக்கின்றது
என்
கவிதையும்
என்னைப்
போலவே .
[
கணையாழி நவம்பர் 1994 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக