வட்டால மரம்
பாதி
வழியில்
எட்டு
திசையும் நிழல் பரப்பும்
இராட்சதக்
குடை .
ஒற்றைப்
பெருங்கால் பச்சைக் கிளி .
எதிர்க்கரை
வாய்க்காலில்
நிழலை
மிதக்க விடும்
ஆயிரங்
கை அரக்கன் .
முதுகுச்சுமை
இறக்கி ,
மாலை
வெயில் தகர்க்க
ஐந்து
நிமிடங்கள் .
தரை
தொடும்
கூந்தல்
ஊஞ்சல்களில்
மேலும்
பத்து நிமிடங்கள் .
எட்டாவது
முடிக்கும் வரை
இரவு
நேரப் பூதமது .
வேர்
விட்டு
இலை
பரப்பி , கனிந்து
விதை
சிதறி
இருபது
வருடம் கழித்துத்
திரும்பிய
போது
வட்டால
மரமில்லை அங்கு
ஆயினும்
தோராயமாய்
இடம் தேடி
நின்றபோது
இருபது
வருட வெயிலும்
காணாமல்
போனது .
கணையாழி ஜனவரி 1994 இதழில் வெளிவந்த எனது
முதல் கவிதை – முதலில் எழுதியது இல்லை ... முதலில் வெளியானது .
நன்றி கணையாழி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக