அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு .
நேற்று நடந்தது போலிருக்கிறது எனினும்
முப்பது வருடங்கள் ஓடி விட்டன .
மீண்டும் அது போல ஒரு நிகழ்வுக்காக
காத்திருக்கிறேனா தெரிய வில்லை
நிகழலாம் ; நிகழாமலும் போகலாம்
நிச்சயமாக சொல்ல இயலாது .
மீண்டும் நிகழ்ந்தால் மகிழ்வேனா ?
நிகழாமல் போனால் வருந்துவேனா ?
தெரியாது .
நிகழாமல் போயிருந்தால்
என்னவாயிருக்கும் ?
நிகழ்ந்ததினால் என்னவாயிற்று ?
எதற்கும் தெளிவான பதிலில்லை
அந்த நிகழ்வு என்னவென்று
நீங்கள் கேட்கவும் போவதில்லை .
நான் சொல்லவும் போவதில்லை
உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம்
அதே போன்ற நிகழ்வொன்று .
[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 மற்றும் கணையாழி செப்டம்பர் 2014 இதழ்களில் வெளியானது . ]
நன்றி : புதுப்புனல் மற்றும் கணையாழி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக