கலைமகள் ஏப்ரல் 1945 இதழில் வெளியான புதுமைப்பித்தன் சிறுகதை “ நிசமும் நினைப்பும் “ - இதழில் வெளிவந்தபடியே கீழே ... ஓவியம் யாரென்று தெரியவில்லை .
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
கலைமகள் ஏப்ரல் 1945 இதழில் வெளியான புதுமைப்பித்தன் சிறுகதை “ நிசமும் நினைப்பும் “ - இதழில் வெளிவந்தபடியே கீழே ... ஓவியம் யாரென்று தெரியவில்லை .
ஒப்பனை செய்யும் மாயம் .
1950 களில் தென்னிந்திய சினிமா தொழில்
நுட்பக் கலைஞர்கள் சங்கம் [ Cine Technicians’ Association of South India – CTA ]
என்றொரு சங்கம் இருந்திருக்கிறது . [ இப்போதும் இருக்கிறதோ ? ] அதன் உறுப்பினர்களுக்காக என்று ஒரு இதழும் வெளியாகிக் கொண்டிருந்திருக்கிறது
. Journal of The Cine Technicians’ Association of South India . 46 பக்கங்கள் – விலை
1 ரூபாய் .
1956 ஜனவரி இதழில் ஒப்பனைக் கலைஞர்
ஹரிபாபு குறித்த ஒரு சிறு கட்டுரையில் [ அல்லது தகவல் ] ஒரு படம் அவர் எஸ் . வி . ரங்காராவுக்கு
ஒப்பனை செய்வது போல உள்ளது . இணைத்துள்ள பிரதியை வாசித்தவர்களில் யாரோ ரங்காராவை அடித்து
முக்காலா கிருஷ்ணமூர்த்தி என்று எழுதியுள்ளார்கள் . கீழேயே ஒப்பனை முடிந்தபின் என்று
இரு படங்கள் உள்ளன . ஒன்று எஸ் . வி . ரங்காராவ் இன்னொன்று முக்காலா கிருஷ்ணமூர்த்தி
. எது சரி என்பதை முகஜாடை வைத்து கண்டு பிடிக்க முடியவில்லை என்றாலும் படங்களில் தென்படும்
மாற்றம் ஹரிபாபுவின் தொழில் திறமைக்குச் சான்றாகவே உள்ளது . இன்னொரு தகவல் . அதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
ஆகிக் கொண்டிருந்த பொய்த் தலைமுடியை [ Wig ] இங்கேயே தயாரித்தது ஹரிபாபுதானாம் .
செப்டம்பர் , அக்டோபர் 1956 இதழில்
ஒரு பக்கத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் T . ஜானகிராம் என்றொரு
பெயர் உள்ளது . அநேகமாக எழுத்தாளர் தி . ஜானகிராமனாகத்தான் இருக்க வேண்டும் . இன்னொரு
சுவாரசியமான பெயர் – ரஜனிகாந் . ஆனால் அவர் இயக்குநர் ரஜனிகாந்தாம் .
மலேயாவில் இருந்து வெளிவந்த “ நேசன்
“ அவர் மறைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு [ 1960 ] அவரது நினைவைப் போற்றும் வகையில்
ஒரு சிறப்பிதழை [ புதுமைப்பித்தன் நினைவு மலர் ] வெளியிட்டது . மு . வ . , கு . அழகிரிசாமி
, ரகுநாதன் , சி . சு . செல்லப்பா , அகிலன் , கைலாசபதி , அ . சீனிவாசராகவன் உட்பட பலரும்
எழுதியக் கட்டுரைகளோடு புதுமைப்பித்தனின் மனைவி திருமதி கமலா புதுமைப்பித்தன் தனது
கணவர் குறித்து எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது .
அந்த இதழில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய
கட்டுரை புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் [ அப்போது செல்வி தினகரி
] எழுதியது . அப்போது அவருக்கு 14 அல்லது
15 வயது இருக்கலாம் . மனத்தில் உள்ளதை வெளிப்படையாகக் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள
கட்டுரையின் முழு வடிவம் கீழே .
சுமேரியர்களும் தமிழும் … [ பகுதி 2 ]
மதுரை தமிழர் வாழ்வியல் : ஜிக்குரட் முதல் மீனாக்ஷி அம்மன் கோயில் வரை – தமிழர் நாகரீகம் சிகரம் தொட்டு .
கட்டுரை ஆக்கம் - புருஷோத்தமன் பெ - ( பெரியார் மணியம்மை
பல்கலைக் கழகம் , ஓய்வு பெற்றவர் ), ஆராய்ச்சி
மாணவர் , நேஷனல் டெக்னிக்கல் டீச்சர்ஸ்
ரிசர்ச் இன்ஸ்டிடுயூட் , தரமணி , சென்னை . மற்றும்
முன்னுரை :
மதுரையின் சிறப்பு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததும் , வான் அளவு உயர்ந்து நிற்கும் மீனாட்சி அம்மன் கோயிலும் ஆகும் . இது போன்ற சிறப்பு சுமேரியாவில் வாழ்ந்த மக்களுக்கும் இருந்ததாகத் தெரிகிறது . லோகநாதன் ( 1 ) தமிழர் கலாச்சாரத்தை பற்றிக் கூறும் போது அது கோயில் ஆன்மீகத்தைத் தொடர்பு கொண்டே இருந்தது என்பார் . அத்துடன் சுமேரியரின் மொழி தமிழரின் முதலாம் சங்கத் தமிழாக இருக்கக் கூடும் எனவும் , இந்தி மொழிகள் அனைத்திற்கும் மூலமான ஒரு தாய் மொழியாகவும் இருக்கக்கூடும் என பல ஆதாரங்களை வைத்துள்ளார் .
முதல் தமிழ்ச் சங்கம் கி . மு . 9600 முதல் கி . மு . 5200 ஆண்டு வரை அமைந்ததாகக் கூறுவர் . சுமேரியர் ஆரம்ப காலம் கி . மு . 5000 முதல் கி . மு . 1600 வரை என்பர் ( விக்கி தகவல் ) அத்துடன் அறிஞர் பலர் ( 2 , 3 ) சுமேரியர் திராவிடர் இனமே என்றும் , அவர்கள் மெசபொட்டோமியாவில் கிழக்கு பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து குடியேறியவர் என்பர் . ஆனால் பின்பு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து , அவர்தம் மொழி அழிந்து பட்டதாகவும் , அவர்கள் எங்கு இடம் பெயர்ந்து சென்றனர் என உறுதியாகக் கூற இயலாது என அயல் நாட்டு அறிஞர்கள் கூறுவர் . சுமேரியர் திராவிடர் மொழி பேசியவர் எனவும் , அவர் கொடி கட்டி வாழ்ந்த காலம் முதலாம் சங்க காலத்திற்கு அருகாமையில் கி . மு . 5000 ஆண்டு ஆக இருந்ததும் கவனிக்கத் தக்கது . அது உண்மை எனின் அவர் விட்டுச் சென்ற களிமண் தட்டுகளில் கீறிப் பொறித்த எழுத்துக்கள் ( cuneiform tablets ) ஆவணங்கள் நமக்கு அரிய தகவல்கள் அளிப்பவையாக இருக்கக்கூடும் . அத்துடன் பிற்காலத்து மதுரையில் தமிழ் வளர்த்த மக்களுக்கும் , சுமேரியாவிலிருந்து இடம் பெயர்ந்தவருக்கும் தொடர்பு இருக்கக்கூடும் . லோகநாதன் போன்ற வெகு சிலரே ( 1 , 2 & 3 ) அக்களிமண் தட்டு ஆவணங்களை ஆராய்ந்த தமிழ் தெரிந்த அறிஞர் . இவ்வாராய்ச்சி மேலும் தொடரவும் மதுரை வாழ் மக்களுக்கும் சுமேரியாவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என அறியவும் வேண்டிள்ளது .
இக்கட்டுரை , சுமேரிய மொழியில் களிமண் தட்டில் கீறி எழுதியிருந்த ஜிக்குரட் ( ziggurat ) கோயில் பற்றிய கவிதை தொகுப்பிலிருந்து வெறும் ஏழு வரிகளை ஒரு முன்னோட்டமாக ஒரு தேடலாக அணுகுகிறது . தமிழரின் வாழ்வியல் , மொழியியல் , ஆன்மீக இயல் தொடர்பான ஒரு அறிமுகமாக அமைகிறது .
ஜிக்குரட் :
சுமேரியாவின் நகரமான “ ஊர் ” என்ற இடத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் குன்று போல் உயர்த்தி அமைக்கப்பட்ட திண்மையான அடித்தளம் கொண்ட மண்ணையும் , வின்ணையும் இணைக்கும் சுமார் 50 மீட்டர் உயரமுள்ள கோயில் அமைந்து இருந்தது . ( விக்கி தகவல் )
இங்கு எடுத்துக் கொண்ட கவிதைத் தொகுப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது ( 4 ) அங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருளை முதல் ஏழு வரிகளுக்கு தமிழில் கொடுக்கப்படுகிறது .
ஜிக்குரட் ஓ ஈ நீர் வானளவு வளர்ந்துள்ளது .
தரைக்கும் ஆகாயத்திற்கும் அஸ்திவாரமாக உயர்ந்த ஆடல் தளமாக உள்ளது .
அப்சூ ( இளவரசனுக்காக ) கோயில் இது .
அங்கு உயர்ந்த மண் மேடும் நல்ல உணவும் சாப்பிட கூடமும் உள்ளது .
குடிக்க நன்நீர் ஓடைகள் வழியாக வருகிறது .
பொட்டாஷ் தாவரம் இடத்தை தூயதாக வைத்துள்ளது .
அப்சூ உன் மேளங்கள் இறை சக்தியை பெற்றுள்ளன .
கவனிக்கவும் , 500 க்கும் மேற்பட்டவரிகள் இத்தொகுப்பில் இருப்பினும் இக்கட்டுரைக்காக முதல் ஏழு வரிகளை மட்டிலும் எடுத்துள்ளோம் .
இதே ஏழு வரிகளுக்கு லோகநாதன் ( 1 ) அளித்த தமிழ் ஒலி வடிவமும் பொருளும் இங்கு கொடுக்கப்படுகிறது .
ஓலி வடிவம் :
இல் ஊநீர் வான்கீ ஒது மூவ்வா
திம்மேய் வான்கீ உண்ணுகாள் எரிதூ
உப்பு சூர் ஈசா நுண்பியர் ஆம் குப்ஊ
இல்தூக்கு ஊ சுகில எரிக்க
பாய் சுகில நுண்னக ஆல் நக்கு
குன்று கீ சுகில நாக(ம்) டபு தூங்க
உப்புசூர் தீங்கியு மெய் காம்
மேற்கண்ட ஒலி வடிவத்திற்கு அவர் தந்த பொருள் :
மிக உயர்ந்த கோயில் கோபுரம் – வானம் , உலகம் இவையுடன் சேர்ந்து நகருவது போல பிரமிப்பு .
வானத்திற்கும் , உலகத்திற்கும் அஸ்திவாரம் தூய எரிதூ .
கோயில் மிளிர்ந்தும் , தேவர்கள் வாழுமிடம் அளவிற்கு உயர்ந்தும் உள்ளது .
கோயில் தூய்மையும் அருளும் அடங்கி ஒளி மிளிர்கிறது .
விண்ணுலக தூயநீர் அருகும் வகையில் வாசல் .
தூய குன்று , இங்கு பாம்புகள் நிறைந்து உள்ளது .
உயரமான இந்த உப்பு சூர் இடம் மெய் சக்தியானது .
மேற்கண்ட அதே ஏழுவரிகளுக்கு நான் மொழிக் கொணர்வாக , முன்னோடியாக கொடுப்பது . இது புருசோத்தமன் மற்றும் ; சுரேஷ் ( 5 ) இணைந்து கையாண்ட முறையைச் சார்ந்து அளிக்கப்படுகிறது . இதில் அடைப்பு குறிக்குள் ஈ சி டி எஸ் எல் ( ECTSL ) இணையதளத்தில் தரப்பட்டுள்ள ஒலிக் குறிப்புடன் அளிக்கப்படுகிறது .
கோயில் ( e2 ) உயர்ந்து ( u6 ) நிற்க ( nir ) வான் ( an ) கிட்ட ( ki-da ) முட்ட ( mu-a )
திம்மண் ( temen ) வான்-கை ( an ki ) ஊன்று கோல் ( u-un-gal ) ஏறி தூக்கி ( eridugti )
அப் ( gh ) சூர் ( ab zu ) ஈஸ்வர் ( es3 ) நுண் ( என் ) பீர் ( nun-bi-ir ) ஆம் ( am3 )
கோயில் ( e2 ) தூவும் ( du6 ) குகன் - வெள்ளி ஒளிர ( kug ) உயர உயர ( u2 )
சிகில் ( sikil ) என எல்லாப் பக்கமும் ( la ) விரிக்க ( rig7 – ga )
பாயும் ( pa5 ) சிகில் ( sikil ) நுண் ( nun ) நாக ( na-ka ) ஆ ( a ) நங்கை ( nag – ga2 )
கூறும் ( kur ) கை ( ki ) சிகில் ( sikil ) எல்லாம் ( la ) நாகம் ( naga ) தூக்கி ( dug4 ) என பேசுக ( ga )
மேற்கண்ட மொழிக் கொணர்வு உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது . இது நாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆராய்ச்சியின்
தேவையை நிலைநாட்டுகிறது . நாம் நேரடியாக
சுமேரிய களிமண் தட்டெழுத்து
ஒலி வடிவங்களை
பார்த்து வார்த்தை கூட்டினோம்
என்றால் , அது தமிழ் தான் என்று உடனடியாக
தெரியாது - சில வெளிப்படையான வார்த்தைகளைத் தவிர்த்து . ஆதலின் சுமேரியர்
களிமண் தட்டு எழுத்துக் களஞ்சியங்களை
தமிழர் , மொழி வல்லுனர் அனைவரும்
நாடிச் செல்ல வேண்டும் . மேற்கண்ட
மொழிக் கொணர்வில் , ஒலி வடிவங்கள்
குறிப்பு வடிவில் இருப்பதால்
சிறிது கடினமே . நமது தமிழ் வழக்குச் சொல் ஒன்றும் கவனிக்கத்
தக்கது , “ தட்டுத்
தடுமாறி படித்தான் ” . இங்கு
தட்டு என்பது சுமேரியர் களிமண் தட்டில்
வடித்த பாடத்தையே
குறிக்கும் எனக் கருதலாம் . இவ்வடிவிற்கு
சுமேரியர் மொழிக் குறிப்பு
ஒலி ‘ ட ’ , ‘ த ’ ,
‘ da ’ என்பதாகும் .
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :
இங்கு மதுரையில் கோயிலும் , மக்கள் வாழ்வும் நன்றாகப் பிணைந்த ஒன்று . கோயில் இவ்வுலகையும் வானுலகையும் பிணைக்கும் மனித இனத்தின் ஒரு பெருமிதம் . நாம் சோர்ந்து தலை குனியும் போதெல்லாம் கோயிலின் கோபுரம் காண நம் தலைநிமிர்ந்து சக்தி சேர்க்கும் சாதனை .
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தமிழரின் அடையாளம் . மக்களின் மனதையும் , இருதயத்தையும் , வாழ்வாதாரத்தையும் ஒன்றுடன் ஒன்றுப் பிணைந்து 2500 வருடங்களுக்கு முந்தியது ( விக்கி தகவல் ) .
விளக்க – விரிவாக்கம் :
சமீபத்தில் 2004 - ல் ஏற்பட்ட
சுனாமியில் கொடிப் பள்ளம் என்ற கடல் பகுதியில் இருந்த ஒரு கிராமம்
அனைத்து மக்களுடன் மொத்தமாக
அழிந்துவிட்டது . அதில் தப்பியவர்
எவரும் இல்லை . ஆனால் அது பற்றி அறிவு அதன் அருகில்
இருந்த மக்களுக்கு
இருந்தது . இது போல் நமது லெமூரியா
கண்டம் அழிந்த போதும் , அதன் விளிம்பில் இருந்த மக்களுக்கு அந்த விபரம் இருந்திருக்கக்
கூடும் . லெமூரியா
கண்டத்தின் விளிம்பில் இருந்த மக்கள் எங்கு சென்றனர் ? இது பற்றி தகவல்கள் சிறிது இருந்தாலும் , கடல் ஆராய்ச்சிகள் சில செய்தாலும் முழு விபரம் நாம் அறிய முடியாமல்
இருக்கிறோம் . லோகநாதன்
மற்றும் ஏனைய ஆராய்ச்சியாளர்கள் ( 1 , 2 , 3 ) நமக்கு
ஓர் எண்ணத்தைத்
தோற்றுவிக்கின்றனர் . அது சுமேரியரின்
வாழ்வாதாரம் , வாழ்வியல் , களிமண் எழுத்து
தொகுப்புகள் இவற்றிலிருந்து நமக்கு தகவல் ஏதும் கிடைக்க
வாய்ப்புள்ளதா என்பதே .
புருஷோத்தமன்
மற்றும் சுரேஷ் ( 5 ) இவர்களின் சுமேரியரின்
துப்பில்ல – பயிலகம் ( e-dub-ba-a ) என்ற தொகுப்பின்
தமிழ் மொழி கொணர்வு
வியப்பை அளிக்கிறது . நாம் இன்றும் ஆரம்ப பள்ளிகளில் படம் பார்த்துக் கதை சொல் அல்லது பாடம் படி என்ற முறையில்
ஆரம்பித்து களிமண் தட்டில்
எழுதும் முறை உருவாகி
இருக்கிறது . இது திண்ணைப் பள்ளிக் கூட முறையை ஒத்து இருந்திருக்கிறது .
அக்கால கவிதை , பாடல் , எழுதும் முறைக்கு
சில இலக்கணங்கள் கூறப்பட்டிருந்தன . பாடல்களை ‘ சீர் ’ என்று அழைத்தனர் . நூலில் மணி கோர்ப்பது
போலவும் , குருவி கூடு கட்டுவது
போலவும் பாடல் இயற்றவும் , மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவும் , இதமாக பாட ஏதுவாகும் அமைக்கும்படி
குறிப்பிட்டனர் . பாடலின் தலைப்பிற்கும்
அதன் பின் வரிகளுக்கும் உரிய தொடர்பு உள்ளதாகவும் , பிழை என்றால் , களிமண் தட்டை உடனே அழிக்கும்
படியும் முறை செய்திருந்தனர் . மொழியின் வளர்ச்சியுடன் , மனித வாழ்விற்கு
ஆதாரமான விவசாயத் தொழில் , நீர்வளம் பெருக்கவும் , புகழ் பாடவும் , புலவர் தொழிலையும்
போற்றி வளர்த்தனர் . இவற்றை காணும் பொழுது மதுரைச்
சங்கம் போன்ற மொழியும் , புலமையும் , தொழில் நுணுக்கங்களையும்
துப்பில்லங்கள் மூலம் துப்பு பயிலகங்கள் , இல்லங்கள்
மூலம் வளர்த்துள்ளனர்
. இதில் பயின்றவர்கள் துப்பு – சார் , துப்பு சாரணர் , பாணர் என்று பலவாறாக
அழைக்கப்பட்டனர் . இவற்றையும் உறுதிபடக்
கூற நமக்கு மேற்கொண்டு ஆராய்ச்சி
செய்ய வேண்டியுள்ளது .
மேலும் சுமேரிய மொழி ஆராய்ச்சி செய்த அயல்நாட்டு அறிஞர்களுக்கு
மிகவும் கடமைபட்டுள்ளோம் . அவர்கள்
தமிழ் அறிந்தவர்கள்
அல்ல . அக்காடிய , அசிரீய மொழி துணை கொண்டு ஒலி வடிவமும் , பொருளும்
அறிந்தனர் . சுமேரிய
மொழி அழிந்து
விட்டது என்று நம்பினர் . அது திராவிடர்
மொழி என ஒத்துக் கொள்ளவில்லை . ஆதலின் அவர்களின்
மொழி பெயர்ப்பு
ஏறக்குறைய பொருள் கொடுத்தாலும்
அக்காலத்து கவிஞனின் மொத்த கருத்தும் அறிய முடியவில்லை . பின் லோகநாதன் ( 1 ) சுமார் ஐம்பது வருட ஆராய்ச்சியில்
சுமேரியர் மொழி , சமஸ்கிருதத்திற்கும்
இன்றைய தமிழுக்கும்
முந்திய மூல மொழி என்றார் . இதன் சார்பாகவும் நாம் சுமேரியாவின் அனைத்து
எழுத்து களஞ்சியங்களையும் ஆராய வேண்டியுள்ளது .
வருங்காலத்தில் , சுமேரிய மொழி ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட குறிப்பையும்
கவனத்தில் கொள்ளலாம் . சுமேரியர்
நன்கு தமிழ் பேசினர் ஆனால் குறுக்கெழுத்து
முறை கொண்டு , சங்கேதக் குறியீடுகள்
கொண்டு எழுதினர் . ஆதலின் அதன் வழியான இன்றைய வழக்குத் தமிழ் கொண்டு , மொழிக் கொணர்வு செய்ய அவற்றுக்கு பொருளும்
மெருகும் கூடும் . மேற்கண்ட
குறிப்புகளைக் கொண்டே ஜிக்குரட் காப்பியத்தின் முதல் ஏழு வரிகளை
முன்னோட்டமாக மொழிக் கொணர்வு
பெறப்பட்டது .
லோகநாதன் ( 1 ) தனது குறிப்பில் ஜிக்குரட்
என்னும் சொல் தமிழ் சொல்லான சிகரம் என்பதிலிருந்து மருவி வந்திருக்கலாம்
என்பார் . இங்கு நாம் எடுத்துக்
கொண்ட ஏழு வரிகளில் சிகில் ( sikil )
என்ற சீர் ( sir )
மிக அருமையானது . சுமேரிய ஈ.பி.எஸ்.டி. ( ePSD ) அகராதியில் ( 6 ) இதற்கு மரம் , பெண் , அருமை என பலவாக பொருள்படும் . அதுவே ‘ சிகி ’ என நம் தமிழ் அகராதியில் ( 7 ) பார்க்கும் போது மயில் , நெருப்பு , ஆமணக்கு என்று பல பொருள் கிடைக்கிறது . மற்றும்
தற்போது உள்ள ஒலி வடிவமாக ‘ சிகில் ’ எனவும் தெரிகிறது . இது தமிழுக்கும் சுமேரிய
சீர்களுக்கும் உள்ள தொடர்பை
நிலை நிறுத்துகிறது . அத்துடன் நில்லாது
ஜிக்குரட் என்ற சொல் ஒலி வடிவம் சிகில் இரதம் என்ற இரண்டு சொற்களின் புணர்தலாக
இருக்கலாம் எனத் தோன்றுகிறது . இதுவே பிற்காலத்தில்
மருவி சிகரம் ஆகி இருக்கலாம்
என்றும் தோன்றுகிறது . இது லோகநாதனின் கூற்றான
சுமேரிய மொழி தமிழுக்கும்
சமஸ்கிருதத்திற்கும் முந்திய மூல மொழி என எடுத்துக்
கொள்ளக் கூடியது . இதுவும்
மேற்கொண்டு ஆராய்ச்சிக்கு உரியது .
மற்றும் நாம் எடுத்துக் கொண்ட ஏழுவரிகளும் சுமேரிய கோயிலின் வர்ணனைகள் என்பதை மறந்து அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று எடுத்து கொண்டால் , அதுவும் மிகப் பொருந்தும் .
ஆக சுமேரிய மக்களும் , மதுரை வாழ் மக்களும் காலத்தாலும் , தூரத்தாலும் பிரிக்கப்பட்டு இருந்தாலும் , அவர்களின் இடைவெளி குறைந்து இருவரும் தமிழ் பேசினர் . கவிதைகள் பூட்டினர் . சங்கம் கல்வி கூடங்கள் வளர்த்தனர் . கோயில் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தனர் . இருவாழ் மக்களும் தமிழ் நாகரீக சிகரம் தொட்டனர் . இது இன்றும் தொடரும் நாகரீகம் .
முடிவுரை :
லெமூரியா கண்டத்தின் விளிம்பில் இருந்த மக்கள் , சுமேரிய தமிழ் பேசிய மக்கள் , மதுரை மக்கள் இவர்களுக்கான இடைவெளி குறைந்து காணப்படுகிறது . இவர்கள் தமிழ் வளர்த்தனர் . ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினர் . சுமேரியரின் எழுத்துக்கள் , கவிதைகள் , களஞ்சியங்கள் , லெமூரியாவின் விளிம்பில் வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்றதாக இருக்க கூடும் . தமிழ் ஆர்வலரும் , அறிஞரும் இதன் சார்பான சுமேரிய மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் , ஊக்குவிப்பதும் முக்கியமாகப் படுகிறது .
காண்க :
1.
Loganathan.K, Sumerian Tamil, Tovered
temple in Sumeria
( இணையதளம் )
2.
கந்தையா பிள்ளை ந . சி . - வரலாற்று காலத்திற்கு
முற்பட்ட பழந்தமிழர் , புரொகிரசிவ்
அச்சகம் , 1948 .
3.
Sathasivam . A . Sumerian – A Dravidan Language , Berkeley
California – 1965 .
4.
ETCSL , Electronic Text Corpus of
Sumerian Literature . , The temple hymns , C . 4 . 80 . 1 ( இணையதளம் )
5.
Purushothaman . P. ; Suresh , E . S . M . Reflecting on pedagogical issues of
e-dub.ba.a of Sumeria linking to our present times , Journal of engineering ,
science , management and education , vol-7(II) , 136 -141 , 2014 , NITTTR , Bhopa l.
6.
ePSD , The Pennsylvania Sumerian Dictionary
( இணையதளம் )
7.
dsal , Digital Dictionary of South Asia ,
Tamil Texicon . University of Madras ( இணையதளம்
)
****************