வேண்டாம் விளையாடாதே . - சிறுகதை [ சுப்ரா ]
கடைவீதியில்
கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை
ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன் பத்தடி தள்ளி ஒன்றுமே தெரியாதவன்
போல வந்து கொண்டிருந்தான் .
ஐந்தாறு
அடிதான் நடந்த்திருப்பாள் . மீண்டும் சில்மிஷத்தை ஆரம்பித்துவிட்டான் .
திலகாவிற்கு கோபம் வந்தது . திரும்பிப் பார்த்து முறைத்தாள் . அவன் ஜவுளிக் கடை
பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .
திலகா மீண்டும்
நடையைத் தொடர்ந்தாள் . சிறிது தூரம் செலவதற்குள் மீண்டும் குறும்பை
ஆரம்பித்துவிட்டான் . திலகாவின் கோபம் அதிகமானது . கையில் இருந்த கூடை கனத்தது .
அதை அப்படியே அவன் தலையில் கவிழ்த்துவிட வேண்டும் போல் எரிச்சல் உண்டாக்கியது .
கண்களில் கோபம்
தெறிக்க முறைத்தாள் . அவன் எதுவுமே அறியாத அப்பாவியாக இட்து கைமுட்டிகளில் வலது கை
விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் .
கணவரில்லாமல்
கடை வீதிக்கு வந்தது தவறு என்று நினைத்துக் கொண்டாள் . அவரோடு வந்திருந்தால் இந்த
தொல்லைகள் இராது .
“ வேண்டாம்
...! விளையாடாதே ! செருப்பு பிஞ்சிடும் . “ குரலில் கோபத்தோடு எச்சரித்தாள் .
அவள் குரலின்
கடுமையில் அவன் பயந்திருக்க வேண்டும் . அதன்பின் சிறிது நேரம் எந்த தொந்தரவும்
இல்லை . ஆனால் சற்றூ நேரத்தில் மீண்டும் ஆரம்பித்துவிட்டான் .
“ சர்க்க் ...
“
திலகா கூடையை
கீழே வைத்து விட்டு திரும்பி சட்டென்று அவனைப் பிடித்தாள் .
“ சொன்னேன்ல்ல
. பின்னாடியே வந்து என் செருப்பை மிதிக்காதேன்னு . இப்ப பாரு . பிஞ்சிடுச்சு . “
“ அப்புறம்
என்னம்மா , எத்தனை தடவை சொல்லிட்டேன் . கேட்காம இந்த கிழிஞ்ச செருப்பை விடாம எல்லா
இடத்துக்கும் அதையே போட்டுக்கிட்டு போயிட்டிருக்கே . இது பிஞ்சாத்தான் வேற
வாங்குவேன்னுதான் இப்படிச் செஞ்சேன் . “
சிரித்தபடியே
சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த செருப்புக்
கடைக்குள் நுழைந்தான் அவளது எட்டு வயது மகன் வினோத் .
------------
--------------- -------------- ---------------
அக் 28 – நவ 03
, 1994 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியான எனது சிறுகதை .
யூகிக்க முடிந்தாலும் குறும்பு ரசிக்க வைத்தது
பதிலளிநீக்கு