நிறைவு .
இடுப்பில் தூக்கி
கொஞ்சிக் கெஞ்சிய
போதும் ,
நிலாவைக் காட்டி
பாட்டுப் பாடி
ஊட்டிய போதும் ,
சாப்பிட்டதும்
சாக்லேட்டென்று
ஆசை காட்டிய போதும் ,
தெருவோரக் கிழவனைக்
காட்டி
பூச்சாண்டியென
மிரட்டிய போதும்
சோறுண்ண மறுத்த
குழந்தையின்
வயிறும் மனமும்
ஒரு சேர நிரம்பியது
தான் நீட்டிய இலைகளை
மென்று தின்று
பசியாறிய
ஆடுகளைப் பார்த்த
போது .
[ புதுப்புனல் நவம்பர் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக