முரண் .
நல்ல கவிதையை
என்னால் இனங்காண
இயலும்
ஆனால்
என்னைத்தான்
எந்த கவிதைக்கும்
தெரியாது .
எத்தனை திருத்தி
எழுதினும்
ஏனோ
தெரியவில்லை
என் கவிதைகளுக்கு
என்னைப்
பிடிக்கவே இல்லை .
படிப்பவர்களுக்கெல்லாம்
கவிதை வரிகளில்
கவிஞனின் மனம் தெரியும்
ஆனால்
கவிதையின் மனம்
கவிஞனுக்கு
மட்டுமே தெரியும் .
[ புதுப்புனல் டிசம்பர் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக