மீட்கப் பட்ட
ஏதேன் தோட்டக் கனி .
இரக்கம் வந்தது
மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு...
மூட்டையாக்கிச்
சுமந்து சென்றார்
மனித பாவங்களை தலை
மீது ...
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ
மூட்டையில்லை ...
வைத்த இடத்தில் .
”” பாவமே இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப்
பிரித்தவாறு ... !
[ பாக்யா பிப்ரவரி 13
– 15 ; 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக