
ஒரு நாவல் எழுதும் நேரத்தில்
பத்து சிறுகதைகள் எழுதிவிடலாம் .
பத்து சிறுகதைகள் எழுதும் நேரத்தில்
நூறு கவிதைகள் எழுதிவிடலாம் .
நூறு கவிதைகள் எழுதும் நேரத்தில்
நிச்சயமாய்
ஒரு கடிதம் எழுதி விடலாம்
உற்ற நண்பனுக்கு .
இதில் எதை எழுதுவது
உத்தமம் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறது மனது –
கைகளில் திறவாத எழுதுகோலை
உருட்டிக் கொண்டு .
[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக