அக்கினிக்
குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு
காட்டிலோர் பொந்திடை வைத்தேன் ;
வெந்து
தணியவில்லை காடு .
பொந்திருந்த
மரம் தவிர
வேறொரு
மரமங்கு இல்லையென்பதால்
வேறெங்கும்
பரவவில்லை அக்கினி .
அப்படியே
இருந்தது மீதிக்காடு
எரிந்தழிந்த
அந்த ஒற்றை மரத்தின்
கரிய
சாம்பலோடு .
[ புதுப்புனல் மே
2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக