மக்குபவையும் , மக்காதவையும் .
ஆடிக்
காற்றில்
மஞ்சனத்தியும்
, வேம்பும்
உதறிய
பூக்களும் , இலைகளும்
நிரம்பிக்
கிடந்த தோட்டத்தைக்
கூட்டித்
தள்ளி மாளவில்லை .
வேலைக்காரப்
பெண்மணி
சலித்துக்
கொண்டதால்
வெட்டியாகி
விட்டது
அடிக்கட்டையை
மட்டும் விட்டுவிட்டு
மழை
வரும்போது
மறுபிறப்பு
எடுத்துக் கொள்ளுமென
மனதைச்
சமாதானப்படுத்தி .
தோட்டத்துக்
குப்பைகளைக் குறைத்தாயிற்று
காலியாகக்
கிடக்கும் பக்கத்து மனையில்
தினசரி
வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை
வசதியாக
மறந்தவாறு
ஏனென
இதுவரை யாரும் கேட்காததால் .
[ ” காக்கைச் சிறகினிலே “ -
ஆகஸ்ட் 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக