” வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக்
கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “
“ புதுக்கவிதைப்
போட்டிக்கான கவிதை “
எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....
பறந்து கொண்டிருக்கிறோம்
பரிணாமத்தின் உச்சம் தேடி .
மறந்து கொண்டிருக்கிறோம்
மனிதப் பண்பாட்டின் கூறுகளை மட்டும் .
ஆதி ஆரம்பத்தில் வனங்களில்தான் வாழ்ந்தோம்
எல்லா உயிரும் சமமென்றுதான் இருந்தோம்
ஒன்றாய் உழைத்து நன்றாய் வாழ்ந்தோம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினோம் .
முதலில் மரங்களை வெட்டினோம் மறைவிடம் தேடி
மறையத் தொடங்கின மற்றவையும் கொஞ்சம்
கொஞ்சமாய்
பின்னர் வேர்களையும் விட்டு வைக்கவில்லை
இன்றோ வளர்ச்சி எனும் கானல் நீர் கண்களை
மறைக்க
அழித்துக் கொண்டிருக்கிறோம் மனிதப்
பண்பாட்டின்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் விதைகளையும் .
வாழு , வாழ விடு என்பதே மனிதப் பண்பாடு
தான் வாழப் பிறரை அழிப்பது பெருங்கேடு .
சுற்றி நடப்பதை உற்றுக் கவனித்தால்
பற்றி எரிகிறது மனம் ஒவ்வொரு கணமும் .
வளர்ச்சி என்றாலே பணம்தான் எனும் மாயை
வளர்த்து விட்டது மனித மனதில் பல நோயை
விரட்டியடிப்போம் இனியாவது அந்தப் பேயை .
எஞ்சியிருப்பதை வளர்த்தெடுப்போம்
அடுத்த தலைமுறையையாவது வாழ விடுவோம்
வாழ்வதற்கேற்ற வளமான புவியில் .
- சுப்ரா .
உறுதி மொழிகள் :
1 ] இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே .
2 ] இப்படைப்பு ” வலைப்பதிவர்
திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ்
இலக்கியப் போட்டிகள் – 2015 “ க்காகவே எழுதப்பட்டது .
3 ] இது இதற்கு முன்
வெளியான படைப்பல்ல . முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது .
4 ] வலைப்பதிவுக்
கையேடுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளேன் .
பதிவரின் பெயர் : வே
. சுப்ரமணியன் [ சுப்ரா ]