தீர்வு
உளிகளின் மன
உளைச்சலால்
சிதைந்து போன
சிற்பங்களின்
சிதறல்கள் .
தூரிகைகளின்
கோபத்தால்
கலைந்து போன
ஓவியத்தின்
கோடுகள் .
வார்த்தைகளின்
குழப்பத்தால்
பாதியில்
நின்று போன
கவிதை வரிகள் .
நரம்புகள்
முறுக்கிக் கொண்டதால்
ஸ்வரம் தவறிய
சங்கீதங்கள் .
தோலில் துளை
விழுந்ததால்
தடுமாறிய
தாளங்கள் .
எல்லாவற்றையும்
வாரி அள்ளி
தெருவோரத்
தொட்டியில்
போட்ட பின்பு
மேலும் அதிகமாக
ஒளிரத்
தொடங்கியது
வானத்து நிலா .
[ கணையாழி மே
2014 ]
நல்ல தீர்வு !
பதிலளிநீக்குplease remove robot check !
பதிலளிநீக்கு