பண்ட
மாற்று .
மதுரை
வீரனுக்கு
சுருட்டும்
சாராயமும் .
மரத்தடி
விநாயகருக்கு
நெய்
கலந்த வெண்பொங்கல் .
முழிக்கும்
முனியப்பனுக்கு
கொளுத்த
கிடா .
நாக்கு
துருத்திய காளியாத்தாவுக்கு
நல்ல
நாட்டுக் கோழி .
களத்தடிப்
பெருமாளுக்கு
தாளித்த
தயிர்ச் சாதமும்
கொண்டைக்
கடலை சுண்டலும் .
சாமிகள்
விரும்புவதைப்
படைத்தாயிற்று
.
அவரவர்
விரும்புவது
அவரவர்க்கு
கிடைக்குமென்ற
நம்பிக்கையில்
.
[
புதுப்புனல் செப்டம்பர் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக