குருவும் சீடனும் – மகிழ்ச்சி.
சீடன் குருவிடம் சென்றான் . குரு
மரத்தடியில் அவரது வழக்கமான இருப்பிடமான வட்டப்பாறையில் அமர்ந்த்திருந்தார்.
” நான் மகிழ்ச்சியாக இல்லை,
மகிழ்ச்சியை எங்கே தேடுவது ? ”
“ மகிழ்ச்சி
எங்கும் இருக்கிறது . “ குருவின் பதில் புன்னகையோடு வந்தது .
“ ஆனால் நான்
எப்படி அதை கண்டு பிடிப்பது ? “
குரு
புன்னகைத்தார் .
“ எளிது . மிக
எளிது . நிறைய வழிகள் உள்ளன . பிறருக்கு உதவுவது அதில் ஒன்று. “
“ ஆனால் பிறருக்கு
உதவ சந்தர்ப்பங்கள் கிட்டுவது இல்லையே .’
குரு அதிகமாக
புன்னகைத்தார் .
“ கடந்த காலங்களை
நினைவு படுத்திப் பார் . யாருக்கும் எந்த உதவியும் நீ செய்ததில்லையா ? “
ஆழ்ந்த
சிந்தனைக்குப் பின் சீடன் சொன்னான் . “ இல்லை குருவே . ”
“ நேற்று ? “
“ இல்லை . “
சீடனின் குரலில் வருத்தம் ஆழமானது .
“ ஆனால் இன்று நீ
இருவருக்கு உதவி செய்துள்ளாய் . “
சீடன்
குழப்பத்துடன் குருவைப் பார்த்தான் .
“ மகிழ்ச்ச்சியைத்
தேடுவதற்கு உனக்கு நீயே உதவிக் கொண்டாய்
. மகிழ்ச்சியை உனக்கு உணர வைப்பதற்கு எனக்கு உதவி செய்துள்ளாய் . “ குரு உரத்த
குரலில் சிரித்தார் .
சீடன் மகிழ்ச்சி
நிறைந்த மனதோடு திரும்பிச் சென்றான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக