புறமும் உள்ளும்
வெளியே
மேகத்தில் மறைந்த
வெளிறிய நிலா .
இருளில்
ஓளிந்த
மரங்கள் .
வேலியில்
உதிர்ந்த
மலர்கள் .
உடைகளில் தொலைந்த
மனங்கள்
சப்தங்களில் கரைந்த
சங்கீதங்கள் .
வார்த்தைகளால் வீரியமிழந்த
கவிதைகள் .
நிழல்கள் நிஜமாகி
நிஜங்கள் கரைந்து போன
கோட்டோவியங்கள் .
சாளரங்களே
இல்லாத
அறையின்
நான்கு சுவர்களுக்குள்
தனியாக அவன் .
[ புதுப்புனல்
பிப்ரவரி 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக