நதியில் மிதக்க விட்ட கவிதை .
நதி
நிலவைச் சுமந்த
ஒரு
முன்னிரவு நேரத்தில்
பேருந்து
பாலத்தில் ஓடியது .
ஜன்னலோர
இருக்கையிலிருந்த
எனது
பார்வையில்
நதியும்
அதில்
மிதக்கும் நிலவும்
பட்டபோது
சட்டென்று
தோன்றியதால்
மனதிலிருந்த
எனது கவிதையில்
ஒன்றை
வீசியெறிந்தேன்
ஜன்னல்
வழியே வெளியே .
மிதக்க
விட்ட கவிதையை
மறந்து
விட்ட
ஒரு
முன்மாலை நேரத்தில்
இலேசாய்
வெளிச்சம் போர்த்திய
நதியின்
கரையில்
நின்றிருந்த
போது
தூரத்தில்
மிதந்து
வந்து கொண்டிருந்தது
என்
கவிதை
நிலவின்
கைகளைக் கோர்த்தபடி
மேலும்
அழகு கூடி .
[ புதுப்புனல் டிசம்பர் 2014 ]
[ மலைகள் இணைய இதழ் - 63 ஆவது இதழ் – டிசம்பர் 2 , 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக