தவிர்க்க
இயலாமல் ....
நிலா
மறைந்திருந்த ,
நட்சத்திரங்கள்
ஒளிந்திருந்த ,
மேகங்கள்
காணாமல் போயிருந்த
ஒரு
இரவு நேர
வானத்தால்தான்
நெய்திருந்தேன்
அந்தக் கவிதையை .
எனினும்
பிரித்துப் பார்க்கையில்
விட்டுப் போயிருந்த அத்தனையும்
ஒட்டிக் கொண்டிருந்தன
அழகாய் அதனதன் இடத்தில் .
[ கணையாழி ஜனவரி 2015 ]
அருமை சார்
பதிலளிநீக்கு