வெற்று வெட்டு
.
வெட்டுதல்கள் நடை
பெற்றுக்
கொண்டேதான்
இருக்கின்றன .
அவ்வப்போது நானும்
வெட்டுவதுண்டு
நகங்களை –
அளவுக்கு மீறி
வளர்ந்ததினால் ;
தினமும் மனைவி
வெட்டுகின்றாள்
விதவிதமான காய்கறிகளை
–
உணவுக்காக ;
நேஷனல் சலூன் நயினார்
வெட்டிக் கொண்டே
இருக்கிறார்
தலை மயிர்களை .
வீதி வீதியாகக்
கூவித் திரியும்
வீரராகவன்
ஏதேனும் ஒரு வீட்டு
மரமேறி
வெட்டித் தள்ளுகிறார்
தேங்காய்க் குலைகளை .
நூற்றுக் கணக்கில்
வெட்டித்
தள்ளப் படுகின்றன
ஆடுகளும் கோழிகளும்
அம்மன் கோயில்
கொடையன்று .
ஒட்டகங்கள் கூட
வெட்டுப் படுகின்றன
குர்பாணி நோக்கத்தோடு
.
ஒவ்வொரு வெட்டுக்கு
பின்னும்
எதோ ஒரு காரணமும்
எதோ ஒரு தேவையும்
இருக்கத்தான்
செய்கின்றது .
ஆனால்
சில சமயங்களில்
மனிதர்கள் ஒருவரை
யொருவர்
வெட்டிக் கொள்(ல்)வது
ஏன் என்றுதான்
புரியவேயில்லை
எத்தனை யோசித்தும்
.
[ இனிய உதயம் ஜனவரி 2015 ]
வருக! வாழ்க! வளர்க!
பதிலளிநீக்கு