கொஞ்ச நம்பிக்கை .
எல்லோரையும் தெரிந்துதான் இருக்கிறது
ஆயினும்
எல்லாமும் தேவைப் படுகிறதென்பதால்
தேர்வு செய்யப் படுகின்றன
உறவுகளும் , நட்புகளும் – கடவுள்களும் கூட
அவ்வப்போதைய தேவைக்கேற்றவாறு .
எனினும்
எஞ்சியிருக்கிறது கொஞ்ச நம்பிக்கை
என்றேனும் ஒருநாள்
அணைத்துக் கொள்ளலாம்
அனைத்தையும் ஒரு சேரவென்று .
[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]
அருமை சார்.
பதிலளிநீக்கு