அகல மறுப்பவை ....
மலையில் இருந்து இறங்கிய போது
வளைவருகில்
கீழே கண்ட பச்சைப் புல்வெளி .
முன்னிரவு நேரத்தில்
பாலத்துச் சுவரில் அமர்ந்திருந்த போது
தொட்டுச் சென்ற தென்றல் காற்று
.
அழைக்காமலே
அருகில் வந்து படபடத்த
பட்டாம்பூச்சியின்
வர்ண இறைப்பு .
துருவேறிய ஜன்னல் கம்பிகளுக்கு
வெளியே சிரித்த
சிவப்புச் செம்பருத்தி .
நிலாவற்ற கரு வானத்தில்
இறைத்திருந்த நட்சத்திரங்கள் .
சாளரங்களை மூடிய பின்னும்
காதுகளை வருடிய தூரத்து இசை
காரணமே இல்லாமல்
தொலைந்து போன நட்பு .
மறந்து போன இன்னும் சில...
இனி வரலாம் மேலும் பல ...
[ ” காக்கைச் சிறகினிலே “ -
ஆகஸ்ட் 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக