மலேயாவில் இருந்து வெளிவந்த “ நேசன்
“ அவர் மறைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு [ 1960 ] அவரது நினைவைப் போற்றும் வகையில்
ஒரு சிறப்பிதழை [ புதுமைப்பித்தன் நினைவு மலர் ] வெளியிட்டது . மு . வ . , கு . அழகிரிசாமி
, ரகுநாதன் , சி . சு . செல்லப்பா , அகிலன் , கைலாசபதி , அ . சீனிவாசராகவன் உட்பட பலரும்
எழுதியக் கட்டுரைகளோடு புதுமைப்பித்தனின் மனைவி திருமதி கமலா புதுமைப்பித்தன் தனது
கணவர் குறித்து எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது .
அந்த இதழில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய
கட்டுரை புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் [ அப்போது செல்வி தினகரி
] எழுதியது . அப்போது அவருக்கு 14 அல்லது
15 வயது இருக்கலாம் . மனத்தில் உள்ளதை வெளிப்படையாகக் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள
கட்டுரையின் முழு வடிவம் கீழே .
பொருளாதார வெற்றியே இங்கு பொருட்படுத்தப்படுகிறது. நெஞ்சைப் பிழியும் பதிவு!
பதிலளிநீக்கு